மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

சங்ககிரியில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சங்ககிரியில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் வரவேற்றார். நகர செயலாளர்கதிர்வேல் முன்னிலை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் மணி, தணிக்குழு உறுப்பினர் செந்தில்செல்வன் ஆகியோர் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்தும் தமிழகத்தில் ஹிந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்மொழிக்காக உயிர் நீத்தவர்கள் வரலாறுகள் பற்றியும் விளக்கி பேசினர். அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன்,கிழக்கு மாவட்ட செயலாளர் கோபால்ராசு, சேலம் மாநகர மாவட்ட சங்கேஸ்வரன்,மாநில கலைத்துறை துணை செயலாளர் சுப்ரமணியம், மாநில மகளிர் அணி துணை செயலாளர் பத்மா பழனிசாமி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story