மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.

திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கினங்க, திமுக கட்சியின் மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டு தோறும் நடைபெறும். திருப்பூர் வடக்கு மாவட்டத்தில், இடுவம்பாளையம், காமாட்சியம்மன் கோவில் திடலில்,40-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபத்ரா தேவி ஆனந்தன் தலைமையிலும், வடக்கு மாவட்ட மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் கழக சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் , வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு‌‌‌நாகராசன் ,மாநில, மாவட்ட, மாநகர,ஒன்றிய,பகுதி கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story