மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

வீரவணக்க நாள் கூட்டம் 

ஒசூரில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராம் நகர் அண்ணா சிலை எதிரில் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன் ஏற்பாட்டில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக தலைமைகழக பேச்சாளர்கள் குடியாத்தம் பெரிய கோடீஸ்வரர், மற்றும் மதுரை குத்தூசி குருசாமி,ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான சத்யா கலந்து கொண்டு தமிழ் மொழிக்காக வைராது பாடுபட்ட முன்னோர்களை நினைவு கூறும் வகையில் சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்வில் மாவட்ட அணிகளின் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி வார்டு செயலாளர்கள் கிளை செயலாளர்கள் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story