லேப்டாப் திருட்டு

லேப்டாப் திருட்டு

பைல் படம்

சேலம் புது பஸ் ஸ்டாண்டில் சாப்ட்வேர் இன்ஜினியரின் லேப்டாப்பை திருடி 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் புது பஸ் ஸ்டாண்டில் சாப்ட்வேர் இன்ஜினியரின் லேப்டாப்பை திருடி 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (39). சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டார். சேலம் புது பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சில் இருந்த போது தனது லேப்டாப் அடங்கிய பேக்கை வைத்திருந்தார். திடீரென அந்த பேக் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகசுந்தரம், இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய எஸ்ஐ பரமசிவம், லேப்டாப் பேக்கை திருடிய திருச்சி மாவட்டம் சாந்தி நகரைச் சேர்ந்த அருண் என்கிற பல்லு (27) மற்றும் ராம்ஜி நகரைச் சேர்ந்த கல்கட்டா என்கிற ராஜ்கமல் (33) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story