தேர்வு எழுத இறுதி வாய்ப்பு 

தேர்வு எழுத இறுதி வாய்ப்பு 

தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் தேர்வு எழுதாக மற்றும் எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் தேர்வு எழுதாக மற்றும் எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், 2008இல் இருந்து சேர்க்கை செய்யப் பெற்று, இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்து கொள்ளாத அல்லது தேர்ச்சிப் பெறாமல் இருக்கும் முதுநிலை, இளநிலை, இளங்கல்வியியல், முதுநிலைப்பட்டயம், பட்டயம், சான்றிதழ், அறிமுக நிலை, தொடக்க நிலை, அடிப்படைநிலை ஆகிய மாணவர்களுக்கு அவர்களது கல்வித் தகுதியை நிறைவு செய்ய இறுதி வாய்ப்பினை உருவாக்குவதற்கு மே 2023 பருவ இறுதித் தேர்வினை, இணையவழியில் மே-2024 முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம், மற்றும் தேர்வுக்கால அட்டவணை ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்கள் இந்த அரிய இறுதி வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) தெரிவித்துள்ளார்.

Tags

Next Story