மறைந்த தலைமையாசிரியர் - கனவை நிஜமாக்கிய இஸ்லாமிய குடும்பம்

மறைந்த தலைமையாசிரியர் - கனவை நிஜமாக்கிய இஸ்லாமிய குடும்பம்

பள்ளி வகுப்பறை திறப்பு விழா 

நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டவேண்டும் என்ற மறைந்த தலைமை ஆசிரியரின் எண்ணத்தை அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் பகுதிகளில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் புதியதாக கட்ட வேண்டும் என தலைமை ஆசிரியர் மருதவாணன் நன்னிலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தலைமை ஆசிரியர் மருதவாணன் மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் உள்ள பாவா முகமது சகாபுதீன் குடும்பத்தினரை அணுகி ஆறு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பங்களிப்பு தொகையாக பெற்று நன்னிலம் பேரூராட்சி உதவியுடன் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முயற்சியும் மேற்கொண்டார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக தலைமை ஆசிரியர் மருதவாணன் திடீரென காலமாகிவிட்டார். மறைந்த தலைமையாசிரியர் மருதமலையின் சீரிய முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டி திறந்து வைக்கப்பட்டது .இதனை தொடர்ந்து மறைந்த தலைமை ஆசிரியரின் எண்ணத்தை நிறைவேற்றிய இஸ்லாமிய குடும்பத்திற்கு நெகழ்ச்சியுடன் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story