புதிய பஸ் சேவை துவக்கம்

புதிய பஸ் சேவை துவக்கம்

நாட்டரம்பள்ளி அருகே மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்ட புதிய பஸ் சேவையை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

நாட்டரம்பள்ளி அருகே மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்ட புதிய பஸ் சேவையை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கநத்தம் பகுதியில் சென்னை கோயம்பேடு வரை செல்லும் புதிய வழிதட அரசு பேருந்தை மக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கநத்தம் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட குக்கிராமங்கள் உள்ளது இப்பகுதி மக்கள் இந்த பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு வரை செல்லும் அரசு பேருந்தை இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் கோரிக்கையின் அடிப்படையில் இன்று விழுப்புரம் கோட்டம் அரசு பேருந்தை வெலக்க நத்தம் பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து நாட்டம்பள்ளி வாணியம்பாடி வேலூர் வழியாக சென்னை கோயம்பேடு வரை செல்லும் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள புதிய அரசு பேருந்தை மக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சதீஷ் சத்தியா மற்றும் மாவட்ட ஆவின் பால் தலைவர் மற்றும் நகர செயலாளர் எஸ்.ஆர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிருவாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்

Tags

Next Story