சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரூபாய் 100.42 கோடியில் சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சட்டக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. தற்போது 285 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரி காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.42 கோடியில் 19.2 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி, கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story