புதிய சாலை திறந்து வைத்த சட்ட அமைச்சர்

புதிய சாலை திறந்து வைத்த சட்ட அமைச்சர்

சாலையை திறந்து வைத்த அமைச்சர்


திருமயத்தில் 6.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வருகை புரிந்தார் அப்பொழுது திருமயம் ஊராட்சி தொடக்கப்பள்ளி, பேருந்து நிலையம் அருகில் திருமயம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 6. 36 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அங்குள்ள கல்வெட்டினை திறந்து வைத்தார் முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருமையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சையது ரிஸ்வான், வார்டு உறுப்பினர்கள் குமார், முத்துலட்சுமி, ஆனந்தி, ஏகமை, காந்திமதி, ரத்தினம், வீராசாமி, சூசைராஜ், அறிவுமணி, வீரமணி, பாண்டியம்மாள், ஆகியோர் உள்ளிட்ட ஊராட்சி செயலாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story