முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி செய்த வழக்கறிஞர் கைது

முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி செய்த வழக்கறிஞர் கைது

வழக்கறிஞர் ஷங்கமித்ரன்

மயிலாடுதுறை அருகே தமிழக முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி செய்த வழக்கறிஞர் கைது.
மயிலாடுதுறை அருகே உள்ள எடுத்துக் கட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஷங்கமித்ரன் என்பவர் விடுத்தள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கூலிப்படைகளை வைத்து கொலை 307 IPC (பெரம்பூர் காவல் நிலைய குற்ற எண்: 274 / 2012 )செய்ய முயன்ற அன்றைய பூம்புகார் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இன்றைய மயிலாடுதுறை அண்ணா திமுக மாவட்ட செயலாளருமான பவுன்ராஜை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் கொலை முயற்சி வழக்கை பவுன்ராஜிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பவுன்ராஜியையும் அவரது கூலிப்படைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஊத்தி மூடிய அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து ,கொலை முயற்சி வழக்கை மறுவிசாரணை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் எனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளேன் என தெரிவித்தார். இன்று காலை வழக்கறிஞர் ஆ.ஷங்கமித்திரனை பொறையார் போலீசார் கைது செய்து நிலையம் அழைத்து சென்றனர்.

Tags

Next Story