பைக்கில் இருந்து தவறிவிழுந்து வழக்கறிஞர் பலி

பைக்கில் இருந்து தவறிவிழுந்து வழக்கறிஞர் பலி

விபத்து 

எட்டயபுரம் அருகே மோட்டார் பைக்கில் இருந்து தவறி விழுந்த தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கீழ ரத வீதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (59). வழக்கறிஞர். இவர் விளாத்திகுளம் கோர்ட்டில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். மேலும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று எட்டயபுரம் வந்துவிட்டு மாலையில் மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் விளாத்திகுளத்துக்கு சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த விநாயக மூர்த்திக்கு செல்வி என்ற மனைவியும் உத்தண்ட ராமன் என்ற மகனும், ஐஸ்வர்யா, கார்த்திகா என 2 மகள்களும் உள்ளனர்.

Tags

Next Story