ஆம்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்

ஆம்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்

மருத்துவமனையை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் 

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வழக்கறிஞருக்கு முறையான சிகிச்சை அளிக்கததால், உயிரிழந்ததாக கூறி வழக்கறிஞர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த பாரத் என்ற வழக்கறிஞருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 22.12.2023 அன்று ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கறிஞர் பாரத்திற்கு ஒரு வார காலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமலும், பாரத்திற்கு எந்த நோய் இருப்பது குறித்து மருத்துவர்கள் பாரத்தின் உறவினர்களுக்கு தெரிவிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததாகவும், அதனை தொடர்ந்து நேற்று பாரத்திற்கு உடல் நிலை சரியாகி விட்டதாகவும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும் படியும் மருத்துவர்கள் கூறியாதாகவும் அதனால் சிகிச்சை முடித்து மீண்டும் நேற்று பாரத்தை அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் பாரத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டதால் அவரது உறவினர்கள் மீண்டும் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் போதே பாரத் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாரத்தின் உறவினர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையின் முன்பு பாரத்திற்கு ஒரு வார காலமாக பணியில் இருந்த மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கததால் பாரத் உயிரிழந்ததாக கூறி பாரத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மருத்துவர்கள் யாரும் பேச்சு வார்த்தையிற்கு வராததால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ அலுவலர் அறையின் முன்பு அமர்ந்து மருத்துவர்கள் உடனடியாக வர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் 3 மணி நேரமாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியும் மருத்துவ அலுவலர்கள் பேச்சு வார்த்தையிற்கு வராத நிலையில், பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்களிடம் ஆம்பூர் துணை காவல் காண்காணிப்பாளர் சரவணன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இச்சம்பம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் ஆம்பூர் அரசு மருத்துவமனையிற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம், பணியில் இருக்கும் மருத்துவர்கள் சர வர சிகிச்சை அளிக்கமால் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும், நோய் என்னவென்று கேட்காமலே மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பி விடுவதாகவும் நோயாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags

Next Story