வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து, நுழைவுவாயிலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது.

இச்சட்டங்கள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதைக் கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தியாக. காமராஜ் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் சங்கச் செயலர் எஸ்.சுந்தர்ராஜன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம்.ஆர்.ஆர். சிவசுப்பிரமணியன், தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர்கள் கோ.அன்பரசன், எஸ். பாலகிருஷ்ணன், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story