வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நீதிமன்றத்தில் இன்று ஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மதுராந்தகத்தில் இன்று வழக்கறிஞர்கள் கருப்பு பேஜ் அணிந்து,50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story