கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள்ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள்ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.


கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவா் விவேகானந்தன் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். செயலா் செந்தில் ராஜன் முன்னிலை வகித்தாா். இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயா்களை மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தது, ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

பொருளாளா் ராஜா சீனிவாசன், துணைத் தலைவா் இளங்கோவன், முன்னாள் தலைவா்கள் ராஜசேகா், சங்கா், மூத்த வழக்கறிஞர்கள் சக்கரபாணி, கலியபெருமாள், ஜெயராமன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டம் முடிந்ததும் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தனா்.




Tags

Next Story