சோளிங்கரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சோளிங்கரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

 ஆர்ப்பாட்டம்

சோளிங்கர் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிட நுழைவுவாயில் அருகில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்தி, சமஸ்கிருதத்தில் சட்டங்களின் பெயர்களை மாற்றுவதை திரும்பப்பெறகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் ரகுராம்ராஜூ, சந்தானகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க துணைத் தலைவர் இ.தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு இந்தி, சமஸ்கிருத மொழிகளில் சட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் வக்கீல்கள் பாஸ்கர், லோகநாதன், பாலமுருகன், பிரபு, சதீஷ், ஹேமாந்த், நரசிம்மன், விஸ்வநாதன், ஆனந்தராஜ், பாண்டியன், ராதிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story