ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

protest

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும்,வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வக்கீலுமான ஆம்ஸ்ட்ராங்க், ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டவர்களையும், உண்மைக் குற்றவாளிகளையும் கைது செய்யவேண்டும், வக்கீல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு புகை படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story