சிவகாசி அருகே வக்கீல்கள், ராணுவ விரர் மீது தாக்குதல்

சிவகாசி அருகே வக்கீல்கள், ராணுவ விரர் மீது தாக்குதல்

சிவகாசி அருகே வக்கீல்கள், ராணுவ விரர் மீதான தாக்குதல் சம்பவத்தை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


சிவகாசி அருகே வக்கீல்கள், ராணுவ விரர் மீதான தாக்குதல் சம்பவத்தை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
சிவகாசி அருக வக்கீல்கள், ராணுவவீரர் மீது தாக்குதல்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராமசாமி (33).இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.இவரது தங்கை தங்கமாரீஸ்வரி (29) என்பவரும் வக்கீலாக பணியாற்றி வருகிறார். தங்கமாரீஸ்வரியின் கணவன் முத்துக்கிருஷ்ணன் (32) ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.அதே ஊரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருக்கும், ராணுவவீரர் முத்துக்கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று வக்கீல்கள் ராமசாமி,தங்கமாரீஸ்வரி,ராணுவீரர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் ஈஞ்சார் கிராமத்தில் டூவீலரில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த செல்லப்பாண்டி,வெயிலுமுத்து, விஜயகுமார்,ஹரீஸ்,முத்துமாரி ஆகியோர் வழிமறித்து 3 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் காயமடைந்த 3 பேரும் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story