சிவகாசியில் வழக்கறிஞர்கள் போராட்டம்...

சிவகாசியில் வழக்கறிஞர்கள் போராட்டம்...
சிவகாசியில் வழக்கறிஞர்கள் போராட்டம்...
சிவகாசியில் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வழக்கறிஞர்கள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.சிவகாசியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்றம் வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி வழக்கறிஞர் சங்க தலைவர் காளிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு சங்க செயலாளர் சதீஷ்பாபு,பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் குப்பையாண்டி,ஐயூப்அலிசேட்,சங்க இணை செயலாளர் ஹரிஹரன் வழக்கறிஞர்கள் வேல்குமார், குருசாமி உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

Tags

Next Story