உயர்மட்ட பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

உயர்மட்ட பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா 

பண்ருட்டி அருகே திருவாமூரில் ரூ.11.50 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் .அருண் தம்புராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவாமூர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் கீழ் கடலூர் - சித்தூர் சாலை கி.மீ 33/4-ல் பிரியும் காமாட்சிப்பேட்டை சாலை 1/8 -ல் நபார்டு RIDF XXIX-75 பாலங்கள் திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுதல் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் அடிக்கல் நாட்டினார். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ, பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story