புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

நியாயவிலை கடை துவக்கம் 

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் ஜனவரி 24ம் தேதி பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தபோது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னை பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.78 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கிளியூரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பென்னக்கோணம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ், கீழக்குடிக்காடு கிராமத்தில் 9-வது வார்டு மயானத்திற்கு ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, வடக்கலூர் ஊராட்சி காமராஜ் நகரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் . கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, என பல்வேறு பகுதிகளில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் 24 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நன்னை ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், நன்னை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டத்தையும், கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சியில் பகுதி நேர நியாய விலைக் கடையினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளோம். பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story