வையாபுரி கவுண்டனூரில் மழை நீர் வடிகால் பணிக்கு அடிக்கல்

வையாபுரி கவுண்டனூரில் மழை நீர் வடிகால் பணிக்கு அடிக்கல்

அடிக்கல் நாட்டப்பட்டது 

வையாபுரி கவுண்டனூரில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் பணிக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையாபுரி கவுண்டனூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14.5 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடத்த திட்டமிட்டு, இன்று அதற்கான பூமி பூஜை விழா கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பணிக்கான பணியை எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று துவக்கி வைத்தார்.

Tags

Next Story