திருப்பூர் முருகம்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர் முருகம்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர் முருகம்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில் முருகம்பாளையத்தில், பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தன்னார்வ அமைப்பின் திட்ட மேலளார் சந்திரா வரவேற்று பேசினார். சட்ட உதவி மைய வக்கீல்கள் சாய்பாரத், அமுதா ஆகியோர் சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள், பொதுமக்கள் அடிப்படை உரிமைகள், பெண்களுக்கான பொது சொத்துரிமைகள் மற்றும் பொது இடங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினர். மேலும், முருகம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா சிறப்புரையாற்றினார். தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல், கள ஒருங்கிணைப்பாளர் சுதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோரும் பேசினர். இதன் பின்னர் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறுத்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story