சேலத்தில் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி

சேலத்தில் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த நீதிபதி


சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆனைக் குழுவின் செயல் திட்ட வரைவு படி சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை நடத்த உத்தரவிட்டது.இதன் அடிப்படையில் தமிழக முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் விழிப்புணர்வு புகைபட கண்காட்சி இன்று நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார் பின்னர் 2022-2023 நிதி ஆண்டில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களின் புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி பார்வையிட்டார் இதனை தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு கானொளி காட்சியினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி 1 ஜெகநாதன், வணிகவியல் நீதிபதி தீபா, மகிலா நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்ரீ ராமஜெயம், மற்றும் மாவட்ட நீதிபதிகள் சார்பு நீதிபதிகள் உரிமைகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் சேலம் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் விவேகானந்தர் செயலாளர் நரேஷ் பாபு உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story