திண்டுக்கல்: கிடு கிடுவென விலை உயர்வு

திண்டுக்கல்: கிடு கிடுவென விலை உயர்வு
எலுமிச்சை விலை உயர்வு
வெயிலின் சூட்டை தணிக்கும் எலுமிச்சம் பழத்தின் வரவு குறைவால் விலை கிடு,கிடு வென உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், சிறுமலை, தாண்டிக்குடி, பண்ணக்காடு, ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிகளவு நடைபெறுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எலுமிச்சை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுவது வழக்கம்.

திண்டுக்கல்லைப் பொருத்தவரை, ரயில் நிலையம் பகுதியிலுள்ள சிறுமலை செட் பகுதிக்கு விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சை, வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடுபடும். கடந்த வாரம் கிலோ எலுமிச்சை ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் எலுமிச்சை விளைச்சலும் குறைந்திருக்கிறது. இதனால், ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் சந்தைக்கு எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை விலை ரூ. 2, 500-லிருந்து ரூ. 4 ஆயிரமாக உயா்ந்தது.

Tags

Next Story