எலுமிச்சம்பழம் விலை சரிவு; விவசாயிகள் கவலை

எலுமிச்சம்பழம் விலை சரிவு; விவசாயிகள் கவலை

 சங்கரன்கோவிலில் எலுமிச்சம்பழம் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

சங்கரன்கோவிலில் எலுமிச்சம்பழம் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சம்பழம் சாகுபடி செய்து வருகின்றனர், இதில் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு எலுமிச்சம்பழம் மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட் இருக்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் எலுமிச்சம் பழம் கொண்டு வருவது வழக்கம் இந்த நிலையில் நேற்று ஒரு கிலோ எலுமிச்சம்பழம் 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிலோ எலுமிச்சம் இன்று 114 ரூபாய் விற்பனை செய்யப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story