இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லெனின் நூற்றாண்டு நினைவு நாள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லெனின் நூற்றாண்டு நினைவு நாள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி மாநகா் 23 ஆவது வாா்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த லெனின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு பொருளாளா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். இதில் ஏஐடியுசி மாவட்டச் செயலரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், மாநகா் மாவட்ட செயலா் சிவா, பகுதி துணைச் செயலா் முருகன், மாதா் சம்மேளன செயலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் பகுதிச் செயலா் பாா்வதி தலைமையிலும் அபிஷேகபுரத்தில் பகுதி செயலா் அஞ்சுகம் தலைமையிலும் மணிகண்டம் ஒன்றியத்தில் பகுதிச் செயலா் முருகன் தலைமையிலும் பொன்மலையில் பகுதிச் செயலா் ராஜா தலைமையிலும் லெனின் உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகா் மாவட்ட செயலா் சிவா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் செல்வராஜ், மாமன்ற உறுப்பினா் சுரேஷ், பேராசிரியா் மணிமோகன் உள்ளிட்டோா் பேசினா்.

Tags

Next Story