கடம்பூர் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை அறிவுறுத்தல்

கடம்பூர் மலைப்பாதையில்  சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை அறிவுறுத்தல்

சிறுத்தை நடமாட்டம்

கடம்பூர் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் முக்கியமான பொருட்கள், கல்லூரி, வேலைக்கு என கடம்பூர் மலை பாதை வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரவு சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்வதற்காக சென்ற பேருந்தில் கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்தனர். கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் மல்லியம்மன் சென்ற கொண்டிருந்த போது சாலையோரத்தில் சிறுத்தை நடமாடுவதை பேருந்தில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பேரூந்தின் சத்தம் அதன் வெளிச்சத்தை கண்ட சிறுத்தை மெதுவாக சாலையை கடந்து சென்றது.

சிறுத்தை நடமாட்டத்தை பேருந்தில் சென்றவர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்தனர். தற்போது சிறுத்தையின் புகைப்படம் மற்றும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags

Next Story