திம்பம் - ஆசனூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம்

திம்பம் - ஆசனூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம்

திம்பம் - ஆசனூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில், இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

திம்பம் - ஆசனூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில், இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

திம்பம் - ஆசனூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் உள்ள திம்பம், ஆசனூர், கேர்மாளம், தலமலை, ஜீரஹள்ளி வனப்பகுதியில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக வனப்பாகுதிகளில் சிறுத்தை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன .

திம்பம் - ஆசனூர் சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனபகுதி வழியாக செல்கிறது. இங்குள்ள வானவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே சென்று வருவது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது .

இந்த நிலையில் நேற்று இரவு திம்பம் - ஆசனூர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது. அதன்பின் வாகனத்தின் முன்னால் ஓடி மறைந்துள்ளது. இந்த காட்சியை வாகனத்தில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story