இந்தியா வெல்லட்டும்: அமைச்சர் மதிவேந்தன்

இந்தியா வெல்லட்டும்:  அமைச்சர் மதிவேந்தன்

அமைச்சர் மதிவேந்தன்

இந்தியா வெல்லட்டும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 136 ல், வனத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மதிவேந்தன் தனது மனைவி சிவரஞ்சனியுடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், இந்திய குடிமகனின் முக்கிய கடமையான ஜனநாயக கடமையை ஆற்றினேன். இந்தியாவின் பன்முகத் தன்மையை, ஜனநாயகத்தை மற்றும் இந்தியா என்பது அனைவருக்கும் என்பதை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும், இந்தியா வெல்லட்டும் என்றார்.

Tags

Next Story