உணவுப் பொருட்களை வெளுத்துக்கட்டும் யானைகள்

வரப்பாளையம் பிரிவு அருகே வந்த இரண்டு காட்டு யானைகள், அங்கிருந்த வாழைத்தார், உணவுப் பொருட்களை சாப்பிட்டு, தண்ணீர் குடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வரப்பாளையம் பிரிவு அருகே ஸ்ரீராம் என்பவரது தோட்டத்திற்குள் இரு காட்டு யானைகள் புகுந்ததுள்ளது.அங்கு இருந்த தோட்டத்து சாலையின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்களை அந்த இரண்டு யானைகளும் பொறுமையாக சாப்பிட்ட பின்னர் வீட்டு முன்பு இருந்த தொட்டியில் தண்ணீர் குடித்த இரு காட்டு யானைகளும் அருகில் இருந்த வாழை தோட்டத்திற்குள் புகுந்து வாழை பயிரை சாப்பிட்டதுடன் அவற்றை சேதப்படுத்தி சென்றன. யானைகள் தோட்டத்திற்குள் புகுந்ததால் ஏராளமான வாழைகள் சேதமான நிலையில் யானைகள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது.இது தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story