லால்குடி அருகே தேர்தலை புறக்கணிப்போம்: கிராம மக்கள் எச்சரிக்கை பதாகை

லால்குடி அருகே தேர்தலை புறக்கணிப்போம்:  கிராம மக்கள் எச்சரிக்கை பதாகை

எச்சரிக்கை பதாகை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதையும் மணல் அள்ள நினைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் சார்பில் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்திமேடு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்ககடந்த சில நாட்களுக்கு முன் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆனந்திமேடு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பதையும், மணல் அள்ள நினைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் சார்பில் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story