புகையில்லா போகி கொண்டாடுவோம்

புகையில்லா போகி கொண்டாடுவோம்

போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் லட்சுமிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் லட்சுமிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வேண்டுகோள் விடுத்துள்ளார் இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடிவந்துள்ளனர். ஆனால்- தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்றுமாக ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

வாகன ஒட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புகையில்லா போகி கொண்டாடுவோம் சுற்றுச் சூழலை பேணிக்காப்போம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story