குழந்தைத் தொழில் முறையை ஒழிப்போம் விழிப்புணர்வு பதாகை

குழந்தைத் தொழில் முறையை ஒழிப்போம் விழிப்புணர்வு பதாகை
விழிப்புணர்வு பதாகை 
சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பதாகையை ஆட்சியர் வெளியிட்டார்.

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி "நமது கடமைகளை நிறைவேற்றுவோம்; குழந்தைத் தொழில் முறையை ஒழிப்போம்" என்று விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.

இந்த நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், தனித்துறை ஆட்சியர் கலியமூர்த்தி,மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Tags

Next Story