பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுப்பது. பெண் குழந்தைள் உயிர் வாழ்வதையும் மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்தல். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, டி.இ.ஓ., ஜோதிமணி ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து பேசினர். ஆசிரியர்கள், மாணவிகள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்.

Tags

Next Story