நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் !

நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் !

ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை வடசேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மை குற்றவாளிகளையும், கொலைக்கு தூண்டிய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கேட்டு, கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை வடசேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல் காலித், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி, மைய மாவட்ட செயலாளரின் மேசியா ஆகியோர் தலைமை தாங்கினர். நாகர்கோவில் மாநகர் மாவட்ட பொருளாளர் நாஞ்சில் துரை வரவேற்றார். மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன், மாநில பேச்சாளர் கோட்டார் யூசுப், மாநில துணைச் செயலாளர் ஈழவளவன் ஆகியோர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story