விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் தேர்தல் பிரச்சாரம் !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் தேர்தல் பிரச்சாரம் !

தேர்தல் பிரச்சாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் சிபிஎம் வேட்பாளர் தோழர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பேசினார்.
சிறுபான்மை மக்களின் உண்மையான காவலர் சச்சிதானந்தம் தான் என்றும் தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் செய்த அதிமுகவை தொடர் தோல்வியிலேயே வைத்து இருக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் சிபிஎம் வேட்பாளர் தோழர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பேசினார். அவர் பேசியதாவது; இந்த தேர்தல் நமக்கெல்லாம் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தேர்தல். இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மோடி ஆட்சியை வீழ்த்த வில்லை என்றால் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவில் தேர்தல்கள் என்பதே நடக்காது. இந்திய ஜனநாயகத்தை பாஜக அழித்து விடும் என்றார்.

Tags

Next Story