தம்மம்பட்டி அருகே நூலகம் கட்டுமான பணி

தம்மம்பட்டி அருகே நூலகம் கட்டுமான பணி
நூலகம் கட்ட பூமி பூஜை 
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே நூலகம் கட்டுமான பணி துவக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, பழைய ஓட்டு கொட்டகையில் ஊர் புற நூலகம் செயல்பட்டு வந்தது. நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே, நேற்று புதிய நூலகம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் முத்து ராஜ் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தம்மம்பட்டி நூலகர் நீலமேகம், புற நூலகர் முருகேசன், ஊராட்சி செய் லாளர் செந்தில், வழக்கறிஞர் தங்கேஸ், ஆனந்தன், புஷ்பநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.என்எஸ்எஸ் முகாம் நிறைவு இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடை பெற்று வந்தது. நிறைவு விழாவிற்கு நகர்மன்ற தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்து பேசினார். நகர திமுக செயலாளர் செல்வம், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரூபிகா உத்தரகுமார், விஜயலட்சுமி குமார் மற்றும் தனி யார் கல்லூரி முதல்வர் மதி(பொ) என்எஸ்எஸ் ஒருங்கி ணைப்பாளர் ரஞ்சித்குமார், டிரீ கிளப் நிர்வாகிகள் நடராஜ், பிரகாஷ், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story