அரசு பள்ளியில் புத்தக கூடம் - அமைச்சர் துவக்கி வைப்பு

அரசு பள்ளியில் புத்தக கூடம் - அமைச்சர் துவக்கி வைப்பு
புத்தக கூடத்தை திறந்து வைத்த அமைச்சர்

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.26 இலட்சம் மதிப்பில் புதிய புத்தக கூடம் கட்டி முடிக்கப்பட்டது. புத்தக கூட்டத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்காக பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் (மார்த்தாண்டம்) மாரிமுத்து, பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபான், நகர்மன்ற ஆணையர் லெனின் அரசு, வழக்கறிஞர் ஜெகதேவ் உள்பட தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story