கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து

அதிக விலையில் உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து வேளாண்மை இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டத்தில், மொத்த உர விற்ப னையாளர்கள், உரத்தை சில்லரை விற்பனையாளர்களுக்கு அனுப்பும் போது, உரிய பட்டியல் மற்றும் ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.

உர விற்பனையாளர்கள், அனுமதி பெற்ற இடம் மற்றும் கிடங்குகளில் மட்டும் உரத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாத இடத்தில், விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்ப டும்.மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களுக்கு அனுமதி வழங்கிய நிறுவனத்திடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும்.

எந்நிலையிலும் அனுமதி பெறாத நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யக்கூடாது. உரங்கள் விவசாயி அல்லாத பிற உபயோகத்திற்கு விற்பனை செய் யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். சில்லரை விற்பனையாளர்கள் உரத் தின் விலை மற்றும் இருப்பு விவர பலகையினை, விவ சாயிகளின் பார்வைக்கு தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் காரீப், குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரம் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு உள்ளது.விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில், பயிர்களின் தேவைக்கேற்ப உரங்கள் பயன்படுத்துவதாலும், உயிரி உரங்கள் அங்கக உரங்கள் மற்றும் நுண் ணூட்ட உரங்களை பயன்படுத்துவதால் சாகுபடி செலவு குறைவதுடன் மண்வளம் பாதுகாக்க ஏதுவாகும். டி.ஏ.பி.க்கு பதிலாக காம்பளக்ஸ் மற் றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் பயன்படுத்துவ தால் சாகுபடி செலவு குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story