மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள்தண்டனை...

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள்தண்டனை...

ஆயுள்தண்டனை

சிவகாசி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி இந்திரா காலனியில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகன் சரவணக்குமார் (24), இவர் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் ஜெயலட்சுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு சரவணக்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சரவணக்குமார் தனது மனைவி ஜெயலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டு கடந்த 26.6.2020 ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில் சரவணக்குமாரை குற்றவாளி என அறிவித்த மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ 11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

Tags

Next Story