கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதா நகர் பகுதி சார்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணக்குமார் கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது மனைவி சுமிதா என்பவரை கொடுமைப் பிரச்சனை காரணமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிழா நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

இதில் சரவணகுமார் என்பவரை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மயிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

Tags

Next Story