போலீசாருக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி

போலீசாருக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி

முதலுதவி பயிற்சியில் கலந்து கொண்ட காவல்துறையினர்

வள்ளி எலும்பியல் மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம் வள்ளி எலும்பியல் மற்றும் விளையாட்டு துறை ஆஸ்பத்திரி சார்பில் நேற்று சேலம் நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சமுதாய கூடத்தில் போக்குவரத்து போலீசாருக்கு உயிர்காக்கும் சிகிச்சை பயிற்சி நடைபெற்றது.

போலீஸ் உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஆஸ்பத்திரி நிறுவனர் நடனசபாபதி கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு, சாலையில் நடந்து செல்லும் போது யாராவது திடீர் மயக்கமடைதல், வலிப்பு ஏற்படுதல் அல்லது நெஞ்சுவலி ஏற்பட்டு அவதியுற்றால் உடனடியாக அவர்களுக்கு எந்த மாதிரி தற்காலிகமாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.

இதில் டாக்டர் விஜயலட்சுமி மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story