ஜெயங்கொண்டத்தில் லேசான மழை - விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டத்தில் லேசான மழை - விவசாயிகள்,பொதுமக்கள்  மகிழ்ச்சி

மழை 

ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி, கருமேகங்கள் சூழ பெய்த லேசான மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது சராசரியாக 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது மேலும் அவ்வப்போது வெப்ப அலையும் வீசியதால் பொதுமக்கள் வெளியில் செல்லவே தயங்கி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு மேல் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் காணப்படுகிறது குளிர்ந்த காற்று வீசியது ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கோடை மழை பெய்து பூமியை குளிர்வித்தது வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள் தற்பொழுது நிலவும் குளிர்ந்த காற்று மற்றும் மழையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story