கீழ்வேளூரில் பல மாதங்களுக்கு பின் லேசான மழை

கீழ்வேளூரில் பல மாதங்களுக்கு பின் லேசான மழை

மழை

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் 5 மாதத்திற்கு பின் பெய்த லேசான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் நேற்று காலை திடீர் என மழை மேகமூட்டம் காணப்பட்டது. பின்னர் கீழ்வேளூர், தேவூர், பட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லேசான மழை பெய்தது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வெயில் சுட்டெரிந்தும்,கடந்த சில நாாள்களாக அனல் காற்றும் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது. வீடுகளுக்குள்ளும் அனல் தாக்கம் அதிகரித்தது.

இதனால் வீட்டில் பகல் நேரத்திலும் ஏ.சி.யை பயன்படுத்தியும் ஏராளமானவர்கள் புதிய ஏ.சி.யை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கீழ்வேளூர், தேவூர், பட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திடீர் என வானம் மழை மேக மூட்டம் காணப்பட்டது. பின்னர் லேசான மழை தூரல் சிறிது நேரம் மழை பெய்து. 5 மாதத்திற்கு பின் நேற்று மழை பெய்தாலும் மதியம் வரை மேக மூட்டம் இருந்ததால நேற்று கீழ்வேளுர் பகுதியில் குளிர்ச்சியாக இருந்தது.

Tags

Read MoreRead Less
Next Story