திருப்பத்தூர்: மது பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர்: மது பாட்டில்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் பறிமுதல் 

திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் பகுதியில் 30 பாக்ஸ் வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் பகுதியில் 30 பாக்ஸ் வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு வெளி மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் உலகநாதனுக்கு கொடுத்த தகவலின் பேரில் உலகநாதன் மற்றும் மதுவிலக்கு போலீசார் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் போலீசார் சோதனை செய்வதை அறிந்த வண்டியை அங்கே விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர் பின்னர் இதனை அறிந்த போலீசார் அந்த காரை சோதனை செய்ததில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான கர்நாடக மாநில மது பாக்கெட்டைகள் அடங்கிய 30 பாக்ஸ் இருப்பது தெரியவந்தது.

பின்னர் கார் மற்றும் வெளிமாநிலம் மது பாக்கெட்டுகள் அடங்கிய 30 பாக்ஸ்களையும் பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story