மதுராந்தகம் அருகே வீட்டில் பதுக்கிய மது பாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அருகே வீட்டில் பதுக்கிய மது பாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல் 

மதுராந்தகம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள சித்தாமூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேவத்தூர் கிராமத்தில் கள்ளத்தனமாக வெளி மாநில மதுபானங்கள் விற்பதாக ரகசியமான காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சித்தாமூர் காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார்தேவாதூர் கிராமம் ஆனந்த் என்பதற்கு சொந்தமான உபயம் இல்லாத ரைஸ்மிலில் மறைத்து வைத்திருந்த புதுச்சேரி மாநிலத்தின் 180 மி.லிட்டர் கொண்ட 1920 மதுபான பாட்டல்களை கைப்பற்றினர். இந்த வழக்கு மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.இதுகுறித்து மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும்,புதுச்சேரி மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்று வந்த தேவாதுரை சார்ந்த அலெக்ஸ் என்பவரை மதுவிலக்கு போலீசா தேடி வருகின்றனர்.மேலும் மதுராந்தகம் செய்யூர் சோத்துப்பாக்கம் அச்சரப்பாக்கம் சித்தாமூர் சூனாம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற மாநில மது வகைகள் சரளமாக விற்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த மதுவிலக்கு போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Tags

Next Story