குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

சூர்யா

கிளியனூர் பகுதியில் சாராய கடத்தலில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் மகன் சூர்யா (வயது 24). பிரபல சாராய வியாபாரியான இவர் மீது கிளியனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்டப குதியில் சாராயம் விற்பனை செய்ததாகவும், கடத்தியதாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 6.5.2024 அன்று கொந்தமூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாராயம் விற்பனை செய்த சூர் யாவை கிளியனூர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து, இவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் பரிந்துரை செய்தார். இதையடுத்து சூர்யாவை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்பேரில் சூர்யாவை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags

Next Story