திருக்கோவிலூர்: போதையில் தகராறு

திருக்கோவிலூர்: போதையில் தகராறு

கோப்பு படம்

திருக்கோவிலூர் அருகே குடிபோதையில் இருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலுார் அடுத்த பரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் மணிகண்டன், (34). அதே ஊரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றார். அங்கு துறிஞ்சிப்பாட்டு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே போதையில் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மது பாட்டில்களால் தாக்கிக் கொண்டர்.

இருவரும் அளித்த புகாரின் பேரில் மணிகண்டன், இளங்கோவன் ஆகிய இருவர் மீதும் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story