டூவீலரில் மதுவிற்பனை - ஒருவர் கைது, 130 மதுபாட்டில்கள் பறிமுதல்

டூவீலரில் மதுவிற்பனை - ஒருவர் கைது, 130 மதுபாட்டில்கள் பறிமுதல்

அசோகன் 

குடியாத்தம் அருகே மோட்டார்சைக்கிளில் மதுபாட்டில்கள் கொண்டு சென்றவரைக் கைது செய்த போலீசார் 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே லிங்குன்றம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் போலீ சார் குடியாத்தம் லிங்குன்றம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர் லிங்குன்றம் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அசோகன் என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்க கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து 130 மதுபாட்டில்க ளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story